June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய தேர்தல் ஆணையத்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நாளை ஏப்ரல் 9 வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு ஆயத்தப் பணிகள் நடைபெற்று நாளை வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயாராக உள்ள நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.குலோத்துங்கன் அ, இ ஆ ப அவர்கள் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் இரவு நேரங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதன் தொடர் நிகழ்வாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முள்ளோடை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியினை பார்வையிட்டு அனைவரும் விழிப்புடன் பணியாற்றுமாறும் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் 35 சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தினார்கள். மேலும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தும் படியும் அங்கு பணியில் உள்ளவர்களை கேட்டுக் கொண்டார்கள். மேலும் கடைசி 72 மணி நேரத்தில் தீவிர கண்காணிப்பிற்காக கூடுதலாக 36 பறக்கும் படைகளும் 30 இரு சக்கர வாகன பறக்கும் படைகளும் பணியமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரி அவர்கள் நேற்று இரவு பாகூர் மற்றும் குருவிநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வில் ஈடுபட்டார்கள். இந்த ஆய்வின் போது காவல்துறை மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப்...
பெருமாநல்லுார்,ஏப்.09- திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் தலைமை அலுவலகம், ஈட்டிவீரம்பாளை யம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்...
புதுச்சேரி: புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் S. ஷாகுல் ஹமீது, தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வில்லியனூர்...
வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார் வெற்றிக்கு உழைக்க உறுதி ஏற்பு.. ஈரோடு. ஏப்ரல். 07 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற...