ரூ 25 ஆயிரம் நிதி உதவி
திருச்சி மாவட்டம், மணப்பாறை 15 வது வார்டு சேதுரத்தின புரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (43) இவரது மனைவி சுகன்யா இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
முதல் குழந்தை பரணி ராஜன் என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இளைய மகள் அஸ்மிதா ஸ்ரீ ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாண்டியராஜனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார் இதனால் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் அவர்களிடம் தனது குடும்ப நிலை குறித்து மனு அளித்திருந்தார்
அவரின் மனுவை ஏற்று நேற்று காலை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் தனது அலுவலகத்திற்கு குடும்பத்தினரை வரவழைத்து தற்போது குடும்ப செலவினங்களுக்காக ரூ 25 ஆயிரம் பணம் ரொக்கமாக வழங்கினார்
மேலும் குழந்தைகளிடம் எம் எல் ஏ ரா கதிரவன் படிப்பு சம்பந்தமான குறைகளை கேட்டார் படிப்பு சம்பந்தமான எவ்வித உதவியாக இருந்தாலும் உடனடியாக தெரியப்படுத்தும்படி கேட்டு கொண்டார்.
சிறுநீரகம் பாதிப்படைந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ ரா கதிரவன் உதவி செய்ததை குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்