புதுச்சேரி கல்வித்துறை மூலம் உப்பளம் தொகுதி பாதர் சாஹீப் வீதியில் உள்ள சி.எம் அஷ்ரப் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சட்டப்பேரவைத்
தலைவர் அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு 99 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் பாட புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களிடையே கற்றல் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் கவுசல்யா, கௌரி, விஜயலட்சுமி, வைஜெயந்தி, இந்து, நளினிதேவி ஆகியோர் உடனிருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்