June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கண்ணகி கோயிலில் ஒவ்வொரு மாதமும் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்:: பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா:-தேனி. மே.03-வரலாற்றுச் சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோவிலில் தேனி மாவட்ட பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா கண்ணகி அம்மனை வழிபட்டார்.சித்ரா பௌர்ணமி திருநாளில் மங்கலதேவி கண்ணகி அம்மனை வழிபட்ட பின்பு அவர் தெரிவித்ததாவது: பனியன்குடி வழியாக தமிழக வனப்பகுதியில் சாலை அமைத்தால் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் எந்த இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை வழிபாடு செய்வார்கள்.சாலை அமைக்கும் பட்சத்தில் தமிழக பக்தர்கள் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கண்ணகி அம்மனை வழிபட்டு செல்வார்கள்.அதற்கு அரசு முழு முயற்சியுடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.சாலை அமைப்பது ஒன்றே தமிழக பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி கண்ணகி அம்மனை தரிசிப்பதற்கு தீர்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.தேனிமாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த கோவில் சேர மன்னன் செரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது.சித்ரா பௌர்ணமி முழு நிலவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த திருவிழாவில் இரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்.அதுபோல்,கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதி வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம்.பளியன்குடியில் இருந்து கண்ணகி கோயில் வரை நடந்து செல்லும் பாதை 6.6 கி.மீட்டர் உள்ளது.தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மேலும்,கண்ணகி கோயில் வளாகத்தில் சித்ரா பௌர்ணமி அன்று மாலை 3:30 மணியளவில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி காயமடைந்த கேரள மாநில காவலர் மற்றும் கேரள,தமிழக பக்தர்கள் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் தவராஜா தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி சார்பில் மே தின விழா கழகத்தின் தலைவர் ஆர் எல்...

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும் நிலையில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர் அம்மனுக்கு பால் தயிறு சந்தனம் உள்ளிட்ட வாசனை திராவிடங்கள் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபம் ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திருக்கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்108 பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர் கோவில் பூசாரி அம்மனைப் பற்றி பாடல் பாடினார் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் அம்மனை வழிபட்டனர் விழாவிற்கான இயற்பாட்டினை கோவில் உதவியாளர் சக்திவேல் குழு அறங்காவலர் தலைவர் ஏழுமலை அறங்காவலர் சுரேஷ் மதியழகன் பச்சையப்பன் சரவணன் வடிவேலு சந்தானம் மேலாளர் சதீஷ் உள் துரை மணியன் அண்ணாமலை காசாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

செஞ்சி மே 2விழுப்புரம்மாவட்டம் செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு தடுத்தாண்டீஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் கோவில்...

கொடூர கொலை!புதுச்சேரி ரவுடி கடலூர் அருகே கொடூர கொலை.புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி கடலூர் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.கடலூர் அருகே உள்ள தாடி நத்தம் வயல்வெளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்டு உடல் சிதைந்த நிலையில் சடலமாக புகழேந்தி மீட்பு.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை.புகழேந்தி மீது புதுச்சேரி மாநிலத்தில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.ரவுடி புகழேந்தியை அழைத்து வந்து கொடூர கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை….

செஞ்சி மே 02விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அமைச்சர் அம்மன்...
செஞ்சி மே 02விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள்...
புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா இன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் சிறப்பாக...