June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்க்க வாழ்த்துக்கள்புதுச்சேரி 6.5.2026 ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் நாளைய தமிழக முதலமைச்சர் திரு விஜய் அவர்களுக்கு தமிழகத்தில் ஆயிரம் எதிற்ப்புகள் ஆயிரம் அவதூறுகள் 41 உயிர் தியாகங்கள் இவை அணைத்தையும் தண் மணதில் பெறும் சுமையாக தாங்கிக்கொண்டு தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுக்கு பிறகு ஒரு தணி மனிதனாக அசைக்க முடியாத மாபெறும் சக்தியாக வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைத்து தமிழக மக்களை தலைநிமிரச்செய்து தமிழகத்தின் முதலமைச்சராக மிகை விறைவில் பதவி ஏற்று மேலும் மக்கள் சேவையை தொடர்ந்து செய்திட புதுச்சேரி ஏழை மக்கள் கழகம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெறிவித்துக்கொள்கின்றோம் என்றும் அன்புடன் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தெறிவித்தனர்

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த வெற்றி இமாலய வெற்றி என அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக, தனது கட்சியின் சின்னமான தர்பூசணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றி கூறினார். மக்களின் ஆதரவே தனது வெற்றிக்குக் காரணம் எனவும், அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன் என்றும் உறுதியளித்தார்.அவரது வருகையையொட்டி காமராஜ் நகர் தொகுதி முழுவதும் கொண்டாட்டக் களமாக மாறியது. பட்டாசுகள் வெடித்தும், வானவேடிக்கைகள் ஒளிர்ந்தும், மேளதாளங்களின் ஒலியுடன் பகுதி முழுவதும் திருவிழா சூழல் நிலவியது. ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.மேலும், மக்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில், இனிப்புகள் வழங்கப்பட்டன. இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் திரண்டு வந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அவரது வெற்றியை பெருமையுடன் கொண்டாடினர்.இந்த வெற்றி, புதுச்சேரி அரசியல் தளத்தில் ஒரு புதிய சாதனையாகவும், காமராஜ் நகர் தொகுதி மக்களின் ஒருமித்த ஆதரவின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது. மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அவர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது