June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அறந்தாங்கி மே1 புதுக்கோட்டை மாவட்டம்அறந்தங்கி அருகே ,ஆலங்குடி கிராமத்தில் காளியம்மன், கருப்பர், நூதன ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி தாலுகா,ஆலங்குடி கிராமத்தில் ,காளியம்மன், கருப்பர்,நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்,இக்கோயில் கும்பாபிஷேகம் செய்வதென கோயில் நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டு அதற்கான புணரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் சிறப்பான யாகசாலை அமைக்கப்பட்டு முதற்கால யாகபூஜை புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியதுவிழாவின் முக்கிய நாளான இன்று மூன்றாம் காலயாகபூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றதுகடம் புறப்பாடானது கோவிலை சுற்றி வலம்வந்த பின்னர் கோபுர கலசத்தை அடைந்ததுபின்னர் கருட பகவான் கோவிலை வட்டமிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.நூற்றுக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆலங்குடி கிராமத்தினர் செய்திருந்தனர்அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அறந்தாங்கி பழனிவேல்

*தஞ்சையில் துணிச்சலுடன் செயல்பட்ட எஸ்.எஸ். ஐ-க்கு., போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு..!!*தஞ்சாவூரில்: கடந்த 26.04.2026 தேதியிட்டான்று தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்ரோ பஜார் அருகில், கையில் வாளுடன் ஒருவரை தாக்க முயன்ற குற்றவாளியை, தனது பணி ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்மந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அவரது கடமைப்பற்று, தன்னலமற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் இ. கா. ப., அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்ததுடன்.. சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர்  மு.ஹி. ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்திய நாள் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாள். தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை உள்ளன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாச் சூழலிலும் வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணி சேர்ந்து வாழும் பன்மைத்துவ சமூக அமைப்பு கொண்ட இந்தியாவை மதத்தால், சாதியால் பிளவுபடுத்தும் மதவெறி பாசிச சக்திகள் ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. வேலை உத்தரவாதம், ஊதிய உயர்வு, வைப்புநிதி உள்ளிட்ட தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்கள் யாவும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. உழைக்கும் தொழிலாளியின் வியர்வை உலரும் முன் அவருக்கான கூலியை வழங்கி விடுங்கள் என்பது நபிகளாரின் பொன்மொழி. உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். உழைப்பாளர் தினத்தில் நாட்டை முன்னேற்றப் பாதையில் தோள்கொடுத்துத் தூக்கி நிறுத்துகின்ற உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களைத்...
ஓசூர் ராம்நகரில் திறந்த வெளி பகுதியில் நான்கு இடத்தில் பழைய பொருட்கள் சேமிப்பு குடோன்கள் உள்ளது இதில் உசேன்...
சங்கராபுரம் மே 1 சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை அனைத்து ஏரிகளுக்கும் பகிா்ந்து வழங்க வலியுறுத்தி...
திருக்கோவிலூர் மே 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா நடைபெற்றது. பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த...

கள்ளக்குறிச்சி : டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் – தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை. கள்ளக்குறிச்சி மே 1 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது நகர பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை மற்றும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், அடரி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்கு தினந்தோறும் வருகின்றனர்.தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அதிகபடியான கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவம் பார்க்கப்படுகிறது. இதனால் வெளிமாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வருகை அதிகரித்துள்ளது.இந்நிலையில் பிரசவத்திற்கு பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை கழிவுகள், ஊசி, மருத்துவ கழிவுகள், பேண்டேஜி, கைஉறை கிளவுஸ், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகள் கொண்டு வரப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் சேகரிக்கின்ற மருத்துவ கழிவுகள் வெளியேற்றாமல் மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தி வந்த பிணவறை பகுதியில் தேக்கிவைக்கப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவ கழிவுகளை நாள் கணக்கில் தேக்கிவைத்து இரவு நேரங்களில் அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.மேலும் மருத்துவமனை வளாகத்தில் தேக்கிவைத்து எரிக்கப்படுகின்ற மருத்துவ கழிவுகளால் மருத்துவமனை பின்புற பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயநிலை இருந்து வருகிறது.எனவே மகப்பேறு மருத்துவமனையில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற அறுவை சிகிச்சை மருத்துவ கழிவுகளை தினந்தோறும் சேகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவித்து டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கப்படாமல் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி முழுமையாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி ஆகியோர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாண்டியன் குலம் புனித லூர்து அன்னை ஆலய பத்தாம் ஆண்டு திருவிழாசெஞ்சி மே 01விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா சம்பந்த ஊராட்சி பாண்டியன் குளம் கிராமத்தில் புனித லூர்து அன்னை ஆலய பத்தாம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றதுநிகழ்ச்சியில் 24/ 04 / 2026 அன்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் திருப்பலியும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றதுதொடர்ந்து 27/04 / 2026 திங்கட்கிழமையன்று மாணவர்கள் மற்றும் பொது மக்களின் நடனம் மற்றும் சிலம்பம் கும்மி பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுதொடர்ந்து28/04/ 2026 அன்று செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணி முதல் திருப்பலி அணிலாடி பங்குத்தந்தை பெர்க்மான்ஸ் மற்றும் பேராசிரியர் அலெக்ஸ் தலைமையில் நடைபெற்றதுமுன்பாக கம்மந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி தலைமையில் புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு மேயாதாளம் சீர்வரிசை எடுத்து வந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவித்து லூர்து அன்னையை தரிசனம் செய்தனர்தொடர்ந்துஇரவு 8:30 மணிக்கு தேர் பவனி துவங்கியது வான வேடிக்கையுடன் நடைபெற்ற தேர்பவனி யை ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி சமூகத் தலைவர் பவுல்தாஸ் பங்குத்தந்தை பெர்க்மான்ஸ் பீட்டர் பேராசிரியர் அலெக்ஸ் ஊர் பொதுமக்கள் தேர் பவனியை இழுத்து தொடங்கி வைத்தனர் தேர் பவனியானது தெருக்களில் வளம் வந்து லூர்து அன்னை பக்தர்களுக்கு அருள் பாலித்தார்இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

வந்தவாசி, ஏப் 30: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால...