July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

சிறுவர் பருவத்திலிருந்து வளர் இளம்பருவம் வரை நியூரோ டைவர்ஸ், சுமாராக கற்போர் , மெதுவாக கற்போர், மற்றும் அசாதாரண...
சேலம் சந்தையில் குவியும் பலாப்பழங்கள் – வரத்து அதிகரிப்பால் விலை குறைவு – இல்லத்தரசிகள் மகிழ்ச்சி. கோடைக்காலத்தின் வரப்பிரசாதமான...

உத்தமபாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 557 டன் நெல் கொள்முதல் :-தேனி…….. -தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 557 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் நெல்லை விற்பனை செய்த ஓரிரு நாளிலே விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாடு-கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஏப்.1-ம் தேதி முதல் திறக்கப்பட்டு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.தற்போது நெல் அறுவடை பணி உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில்.தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையம் உத்தமபாளையத்தில் திறக்கப்பட்டதை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் ராயப்பன்பட்டி ஆனைமலையன்பட்டி,ராமசாமி நாயக்கன்பட்டி உட்பட விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் சம்பந்தமான தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.தரக்கட்டுப்பாட்டு அலுவலரால் சன்னரக நெல் சிறந்த முறையில் பரிசோதனை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழ் உள்ள நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.மேலும் விவசாயிகளின் நெல்லை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நெல்லை விற்ற உடனே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் பணம் செலுத்தப்படுவதால் விவசாயிகள் மண்டல மேலாளருக்கும் அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.கடந்த மே -1 ம் தேதி (வெள்ளிக்கிழமை) கடும் மழை பெய்த போதிலும் நெல்லை மிகச் சிறப்பான முறையில் பாதுகாத்து வைத்ததற்காக நெல் கொள்முதல் நிலைய தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு அப்பகுதி விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கொடூர கொலை!புதுச்சேரி ரவுடி கடலூர் அருகே கொடூர கொலை.புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி கடலூர் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.கடலூர் அருகே உள்ள தாடி நத்தம் வயல்வெளி பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுப்பட்டு உடல் சிதைந்த நிலையில் சடலமாக புகழேந்தி மீட்பு.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை.புகழேந்தி மீது புதுச்சேரி மாநிலத்தில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.ரவுடி புகழேந்தியை அழைத்து வந்து கொடூர கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை….

புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா இன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் சிறப்பாக...