July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

சங்கராபுரம் மே 1 சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை அனைத்து ஏரிகளுக்கும் பகிா்ந்து வழங்க வலியுறுத்தி...
திருக்கோவிலூர் மே 1 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா நடைபெற்றது. பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த...

கள்ளக்குறிச்சி : டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகள் – தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை. கள்ளக்குறிச்சி மே 1 கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் டன் கணக்கில் தேங்கி கிடக்கும் மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரிக்காமல் அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையானது நகர பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை மற்றும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம், அடரி, வேப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்கு தினந்தோறும் வருகின்றனர்.தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அதிகபடியான கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவம் பார்க்கப்படுகிறது. இதனால் வெளிமாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வருகை அதிகரித்துள்ளது.இந்நிலையில் பிரசவத்திற்கு பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை கழிவுகள், ஊசி, மருத்துவ கழிவுகள், பேண்டேஜி, கைஉறை கிளவுஸ், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகள் கொண்டு வரப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் சேகரிக்கின்ற மருத்துவ கழிவுகள் வெளியேற்றாமல் மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தி வந்த பிணவறை பகுதியில் தேக்கிவைக்கப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவ கழிவுகளை நாள் கணக்கில் தேக்கிவைத்து இரவு நேரங்களில் அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.மேலும் மருத்துவமனை வளாகத்தில் தேக்கிவைத்து எரிக்கப்படுகின்ற மருத்துவ கழிவுகளால் மருத்துவமனை பின்புற பகுதியில் வசிக்கின்ற குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயநிலை இருந்து வருகிறது.எனவே மகப்பேறு மருத்துவமனையில் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்ற அறுவை சிகிச்சை மருத்துவ கழிவுகளை தினந்தோறும் சேகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மருத்துவமனை வளாகத்தில் மலைபோல் குவித்து டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கப்படாமல் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி முழுமையாக வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி ஆகியோர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வந்தவாசி, ஏப் 30: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால...

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் பிறந்த நாள் விழாவின் கொண்டாட்டமாக ரெட்டியார் பாளையத்தில் உள்ள டJK தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் முதன்மை செயலாளர் சுரேஷ், செயலாளர்கள் துரைசாமி, பிரபாகரன், அனிதா, மகளிர் அணி துணை தலைவி, மாநில பொதுச்செயலாளர் ராகினி, மாமதிராஜன், மணிமேகலை, மகளிர் அணி செயலார்கள் ஜெகதீஷ்வரி, மாநில பொது செயலாளர் கலியுக ராணி, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அப்துல் வஹாப், முத்த நிர்வாகி செயசங்கர், முருகையன்,மீனவர் அணி தலைவர் குமரன் தொண்டர் தொண்டர் அணி தலைவர் மதன், இளைஞர் அணி தலைவர் பிரகாஷ், துணை தலைவி பத்ம பிரியா, அருள்தந்தை ரோஜர் அம்புரோஸ், ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மூன்று மதங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைவருக்கு பிராத்தனை செய்தனர். அப்போது செல் போன் மூலம் வீடியோ காலில் வந்த JCM அவர்கள் ஆப்பி பர்த்ரே என்ற பாடல் பாடி உற்சாக வாழ்த்துக்கள் தெரிவிற்றுக் கொண்டன் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

செஞ்சி ஏப் 28விழுப்புரம் மாவட்டம் வல்லம் வட்டாரம் மேல் சித்தாமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியாதினத்தை...
புதுச்சேரி, ஏப்ரல் 27: புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. ஜோஸ் சார்லஸ் மாட்டின் பிறந்தநாளை முன்னிட்டு,...
சேலத்தில் வினோதம் – கோடை வெயிலுக்கு டப் கொடுக்கும் இயற்கை ஏசி ஆட்டோ,வியர்க்காத பயணம்,வித்யாசமான அனுபவம். தமிழகத்தில் கோடை...
விபத்தை ஏற்படுத்தும் கார் மீது என்ன விதிக்கப்படும். மேலும் மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை காரில் ஏற்றிக் கொள்ள...