June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி – முதலியார்பேட்டையில் புதிய ஐஸ் கிரீம் கடை திறப்பு விழா: சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் திறந்து வைத்தார்!

புதுச்சேரி, ஜூன் 24:

புதுச்சேரி முதலியார்பேட்டையில் புதியதாக தொடங்கப்பட்ட Fruitice ஐஸ் கிரீம் கடை இன்று காலை சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்தார்.

இயற்கை பழச்சுவைகளுடன் தயாரிக்கப்படும் ஐஸ் கிரீம்களை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த கடையின் தொடக்க விழாவில் பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பிரினோ வர்கீஸ் & இந்துமதி, ஃபெலிக்ஸ் & பிரவீனா ஆகியோரின் அன்பான முயற்சியாக இந்த கடை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பகுதி மக்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.