June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என். எம் பிரதீப் வழங்கினார். ஈரோடு. ஏப்ரல். 26 ஈரோடு...
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி பண்ணிஅள்ளி ஊராட்சி வரட்டம்பட்டி கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுக பூத் ஏஜென்ட் மணி,...

*ஓட்டு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு*கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளுக்கு, நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு எண்ணும் மையத்தில், 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளின் முன்புறம், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல், மத்திய துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் என, 297க்கும் மேற்பட்டவர்கள் கல்லுாரி வளாகத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, ஒரு ஏ.டி.எஸ்.பி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர்கள், 68 போலீசார், 20 ஆயுதப்படை போலீசார், 6 மத்திய துணை ராணுவப்படையினர் ஒரு ஷிப்ட்-க்கு, 99 பேர் என மொத்தம், 297 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

1 min read

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: குடோனுக்கு சீல், ஒரு நபர் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!புதுச்சேரி:புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலும், வடக்கு காவல் கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும், புதுச்சேரி காவல் துறையினர் சட்டவிரோத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று (ஏப்ரல் 24, 2026) மாலை 4 மணியளவில், டி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் குமரன் வீதி, எண். 22 என்ற முகவரியில் உள்ள ஒரு குடோனை, போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவசரமாக பூட்ட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் கோசாபாளையத்தைச் சேர்ந்த மாரியமுத்து (50) என்பது தெரியவந்தது. தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, அதிக லாபத்திற்காக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரது குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:கூல் லிப் (Cool Lip) – 2 பண்டல்கள்ஹான்ஸ் (Hans) – 8 பண்டல்கள்விமல் பான் மசாலா (Vimal Pan Masala) – 6 பண்டல்கள்வி1 டொபாக்கோ ஹேப்பி ஹோலி (V1 Tobacco Happy Holi) – 7 பண்டல்கள்இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு (Cr. No. 96/2026) பதிவு செய்யப்பட்டு, மாரியமுத்து கைது செய்யப்பட்டார். COTPA சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் (JJ Act) கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குற்றவாளியை விரைந்து கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.

சேலம்,26/04/2026.சேலத்தில் கள்ளக்காதலனின் ஒரு நிமிட முட்டாள்தனத்தால் 3 உயிர் பலி.சேலம் சத்யாவின் கள்ளக்காதல் காதலனின் ஒரு நிமிட முட்டாள்தனம் ஆடிப்போன போலீஸ்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தவர் சத்யா.இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். சத்யா வேலை செய்யும் கடையில் மேலாளராக வேலை செய்தவர் சக்திவேல். ஒரே கடையில் வேலை செய்த காரணத்தால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தனர். இந்நிலையில் சத்யா சக்திவேலை ஒரு கட்டத்தில் தவிர்த்துள்ளார். இதனால் அடுத்தடுத்து நடந்த சம்பவம் ஆடிப்போக வைத்துள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 33). இவருக்கும், காமலாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு மஹிஷா (13) என்ற மகளும், கிஷாந்த் (10) என்ற மகனும் இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார், சத்யாவை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சத்யா தனது மகன், மகளுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த சத்யா ஓமலூரில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அதே கடையில் சேலம் ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (42) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.கடந்த சில மாதங்களாக சத்யா, சக்திவேலுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சக்திவேல், ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய்? என்று சத்யாவிடம் அடிக்கடி பேசி சமரசம் செய்து வந்துள்ளார். இருப்பினும் சத்யா அவருடன் பேசவில்லை.நேற்று முன்தினம் இரவு சக்திவேல் சத்யாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது சத்யா வேறு ஒருவரிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம்.இதையடுத்து சக்திவேல் சத்யா ஜோடி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சத்யாவை மறைத்து வைத்திந்த கத்தியால் சக்திவேல் தாக்கினாம். இதை கண்டு தூங்கி கொண்டிருந்த சிறுவன் கிஷாந்த் எழுந்து, ஏன் என் அம்மாவுடன் சண்டை போடுகிறீர்கள், வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் என்று தடுத்தாராம், இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல், சிறுவனை கத்தியால் வெட்டிக்கொலை செய்ததுடன், சத்யாவையும் சரமாரியாக வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்,இதனிடையே, வெள்ளாளப்பட்டி அருகே நேற்று காலை சக்திவேல் தான் அணிந்திருந்த பெல்ட் மூலம் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை பாராளுமன்றத்தில் எதிர்த்த திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தி கூட்டணியை கண்டித்து, சுதேசி மில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை மாபெரும் பேரணி நடைபெற்றது.இந்த பேரணிக்கு மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.மாநில மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி, மகளிர் அணி பொறுப்பாளர் ஜெயந்தி, மாநில துணைத் தலைவி ஜெயலட்சுமி மற்றும் ஆடலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வம், தீப்பாய்ந்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் பாபு, தங்க விக்ரமன், மாநில துணைத் தலைவர்கள் பாஸ்கர், அம்மாவாசை, பழனி மாநில பொருளாளர் ராஜகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன், அணி தலைவர்கள் பாரதி மோகன், கோவேந்தன், வில்லியனூர் மாவட்ட பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் ,மாவட்டத் தலைவர்கள் உலகநாதன், கிருஷ்ணராஜ், அனிதா, சுகுமார், முருகதாஸ், ஊடகத்துறை தலைவர் திரு. நாகேஸ்வரன், சமூக ஊடகத் தலைவர் கார்த்திகேயன், பிரிவு இணைப் பொறுப்பாளர் வேல்முருகன் மகளிர் அணி பொதுச் செயலாளர்கள் விஜயலட்சுமி பிரியா உள்ளிட்டோர் மற்றும் தொகுதி தலைவர்கள், மற்றும் 5000 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

வந்தவாசி, ஏப் 25: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வந்தவாசி அடுத்த பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு...
சேலம் அரியானூரில் காளியம்மன் கோயிலுக்கு தடுப்பு வேலி – தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல். சேலம்,அரியானூா் அருகே...
மே.4கில் பதிவு செய்யப்பட்ட தீர்ப்பு தெரியவரும்… ஈரோடு. ஏப்ரல். 25 ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் விறுவிறுப்பான...