June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) தென் மண்டல தலைவர் பி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ.முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர் மற்றும் தலைவர் பி.ஜெய்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தொழிற்துறை வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கொள்கை ரீதியிலான பங்களிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுடன் இந்தியத் தொழிற் கூட்டமைப்பு கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மை குறித்தும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் நிலையான பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நாள்: 15.05.2026 நீட் தேர்வு ஏற்கனவே கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. கோச்சிங்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா ஏலமனம் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில், அரசு தடை விதித்திருந்தாலும், தேங்காய் சிரட்டையை எரித்து கொட்டாங்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை பல மாதங்களாக செயல்படுவதாகவும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் தேங்காய் சிரட்டையின் மூலம் கார்பன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தடைசெய்யுமாறு இத்தொழிற்சாலை தற்போது சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் தெரிய வருகிறது.இந்த தொழிற்சாலை, மலைக்கரடுகளின் அருகில் செயல்படுவதால், அப்பகுதி விவசாய நிலங்களுக்கும் குடிநீர் ஆதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் நீர்நிலையிலிருந்தே தண்ணீரை பெறுகின்றன. எனவே, தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் நச்சுப் புகை, நச்சு வேதிப்பொருட்கள் ஆகியவை நீர்நிலைகளில் கலக்கும்போது அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் விவசாய நிலங்களின் வளத்திற்கும் வனப்பகுதிக்கும் பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் தாலுகா மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுக்குச் சொந்தமான குட்டையில் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் மண் கடத்தலில் ஈடுபட்டு...
சமூக ஆர்வலர் கோல்டு கோபாலகிருஷ்ணன் கோரிக்கை திருச்சி மாவட்டம் மணப்பாறை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நொச்சி மேடு(...