June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வையம்பட்டியில்ரூபாய் 9.35கோடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI) அமைத்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் தேர்தல் பரப்புரை

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் பா அப்துல் சமத் வையம்பட்டி ஒன்றியத்தில் நேற்று காலை கல் கொத்தனூர் மூரம்பட்டி அனுக்கானதம் குரும்பபட்டி புறத்தாக்குடி பழைய கோட்டை தோப்புப்பட்டி ஒந்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பரப்புரையயில் ஈடுபட்டார்

அப்போது அவர் பேசியதாவது:
நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டமன்றத்தில் 42 முறை மணப்பாறை மக்களுக்காக மணப்பாறையின் அடிப்படைத் தேவைகளுக்காக குரல் கொடுத்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி முழுவதும் என்னால் முடிந்த வரை மக்கள் நலத்திட்ட பணிகளை மக்களுக்கு பெற்றுத் தந்து மணப்பாறையில் அரசு கலைக்கல்லூரியும் வையம்பட்டியில் ரூபாய் 9 35 கோடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளேன்

மேலும் மணப்பாறையின் தாகம் தீர்த்த சாதனையாக 30 ஆண்டுகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண ரூபாய் 800 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை வேகம் எடுக்கச் செய்த மகத்தான பணியையும் செய்துள்ளேன் எனவே மீண்டும் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மீண்டும் மணப்பாறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறேன் எனக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாய்ப்பு அளித்து வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தர வேண்டும் என்றும் இன்னும் பல சாதனைகளை மணப்பாறைக்கு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பை தரும்படி பேசினார்