மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திருமண விழாவிற்கு வந்த மூதாட்டி ஒருவர், பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (63). இவர் நேற்று மத்தூர் அருகேயுள்ள தோழனூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு முதல் கஸ்தூரியைக் காணவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை திருமண வீட்டின் அருகே இருந்த பாழடைந்த கிணறு ஒன்றில் கஸ்தூரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் காவல் துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டி நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வண்டி எண் 22657 பின்னால் உள்ள மகளிர் பொது பெட்டியில் பயணம் செய்து வந்த செல்வப் பிரியா என்பவரிடமிருந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரராக தனியார் நிறுவனமான THARU & SONS ல் ரயில் வண்டிக்கு Water Filling வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த நிரஞ்சன் மண்டல் வயது 38, S/o கணேஷ் மண்டல், பவானி பூர், பூர்ணியா மாவட்டம், பீகார் என்பவர் அப்போது நின்று கொண்டிருந்த மேற்கண்ட வண்டியில் ஏறி செல்போனை எடுத்துக் கொண்டு ஓடும்போது அப்போது பணியில் இருந்த ரயில்வே காவல் நிலைய காவலர் திரு சதீஷ்குமார் கையும் களவுமாக பிடித்து திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ரயில் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவு படி வழக்கு பதிவு செய்து திருச்சி நீதிமன்றம் JM 4ல் ஆஜர் செய்து 15 நாட்கள் காவல் அடைப்பு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம்,23/06/2026.
தேன்கனிக்கோட்டையில் ஆடு திருட்டு வழக்கில் எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு