வந்தவாசி, ஜூன் 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தீயணைப்புத் துறை மற்றும் ஆசியன் இன்ஸ்டிடியூட் இணைந்து ‘தீயணைப்பும் மருத்துவ துறையும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கை ஆசியன் வளாகத்தில் நடத்தினர். நிகழ்ச்சிக்கு தாளாளர்
பீ.ஆசியா பரவீன்
தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, தீயணைப்பு துறை நிலைய அலுவலர்
மு.பிரபாகரன் பங்கேற்று தீவிபத்து
விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்து கருத்துரை வழங்கினார். மேலும் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு
செயல்முறை விளக்கம் அளித்தனர். மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

More Stories
வாழ்க்கை முழு வட்டமாகச் சுழலும் ஒரு வியக்கத்தக்க தன்மையைக் கொண்டது.
*புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த காலாப்பட்டு அரசு பள்ளி; தேசிய அளவில் முதலிடம் பிடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
சமூகப் பொறுப்புணர்வுடன் களமிறங்கிய லூமினா டேட்டாமேடிக்ஸ்: புதுச்சேரியின் 400 ஆண்டுகள் பழமையான முழியன் குளம் சீரமைப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி கௌரவம்