தாக்குதலில் காயமடைந்த அதிமுக பூத் ஏஜென்ட் – கே.பி.முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல்
1 min read
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி பண்ணிஅள்ளி ஊராட்சி வரட்டம்பட்டி கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுக பூத் ஏஜென்ட் மணி, திமுகவினரால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.பி.எம்.சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.