June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நாள்: 18.04.2026 புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம்...

ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.. ஆனைக்கல் பாளையம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. ஈரோடு. ஏப்ரல். 19 ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. என்று அணைக்கள்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டமன்ற பொது தேர்தல் இம்மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து உதயநிதி ஸ்டாலின் பரப்பரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.. கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து வருகிறேன். இன்று நம் வணக்கம் பெரியார் மண்ணில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி.. நம்முடைய திராவிடம் மாடல் 2.0 ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையோடு சொந்த காலை நிற்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பெண்களுக்கான நிதி உதவி திட்டங்களை நிறைவு செய்து வருகிறார். மாணவ மாணவிகளும் தங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் அவர்களுக்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் நம்முடைய முதல்வர் அவர்கள். இந்த ஈரோடு மாவட்டத்தில் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து நம்முடைய முதல்வர் அவர்கள் நிறைவேற்றி உள்ளார். நாம் நம்முடைய வாழ்க்கையில் முரட்டு பக்தர்களை பார்த்து இருக்கின்றோம் ஆனால் முரட்டு அடிமையை பார்க்க வேண்டிய கால கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த முரட்டு அடிமை யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதனை நான் சொன்னால் என் மீது கோபப்படுகிறார். அவருக்கு உண்மை சொன்னால் எப்பொழுதும் சொல்பவர்கள் மீது கோபம் வருவது வழக்கம். துரோகத்தின் மொத்த உருவமாகவும் அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் எடப்பாடி பழனிசாமி இருக்கின்றார். சங்கிகளின் கூட்டமான பாஜகவை தமிழகத்தில் காலூன்ற எடப்பாடி பழனிச்சாமி துணைகிறார். இன்றைக்கு ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு சீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இது நமக்கு கிடைத்த பெரிய வெற்றி. நம்முடைய தலைவர் அவர்களுக்கு கிடைத்த வெற்றி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த சட்டம் உன் வடிவில் கொண்டு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் நம்முடைய தலைவர் அவர்கள். இன்று அதில் நாம் வெற்றி பெற்று இந்தியாவிற்கே ஒரு தலை சிறந்த வழியாக திமுக திகழ்கிறது. அடைகின்ற கடும் வெயிலிலும் ஆர்வத்தோடு பொறுமை காத்து என்னுடைய பேச்சை கேட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை இங்கு உள்ள எட்டு தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவது நிச்சயம். இங்கு ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஒரு மூத்த அரசியல்வாதி. அது மட்டுமல்லாமல் உங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அவர்களிடம் பேசிக் கொண்டு வந்தவர். ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன் ஒரு சிறந்த பண்பாளர். மெத்தப் படித்தவர் அவருக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தொடர்ந்து மொடக்குறிச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில் நாதன் சிறந்த பண்பாளர் பட்டம்படித்தவர். அண்ணன் வைகோ அவர்களின் அன்பை பெற்றவர் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இங்கே நான் அறிமுகப்படுத்தியுள்ள மூன்று வேட்பாளர்களின் வெற்றி பெற செய்வது உங்களின் கடமையாகும். உங்கள் அனைவரையும் அன்போடு மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன் அடுத்து நம்முடைய தலைவர் தலைமையில் அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தால் இன்னும் பல எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படும். இவ்வாறு ஆனைக்கல் பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பிரச்சார கூட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வரும்பொழுது நேரம் பிற்பகல் 12 மணி ஆகிவிட்டது. கடும் வெயிலிலும் பொதுமக்கள், தொண்டர்கள் அவரின் பேச்சைக் கேட்க திரளாக வந்திருந்தனர். துணைமுதல் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

திமுக கூட்டணி வேட்பாளர் ப அப்துல் சமத் பேச்சு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் மதச்சார்பற்ற திமுக கூட்டணி...
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சேலத்தில் திமுக அரசை கிழித்து தொங்க விட்ட நடிகை கெளதமி. சேலம் தெற்கு தொகுதி,அதிமுக...
செஞ்சி. ஏப்ரல்.19 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கேமரா சின்னத்தில் போட்டியிடும்...
ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி தொகுதிகளுக்கான திமுக, வேட்பாளர்., சு. முத்துசாமி, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன்,...

*கூத்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா..!*வந்தவாசி, ஏப் 19:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கூத்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த நிகழ்வை தெள்ளார் வட்டார கல்வி அலுவலர்கள் கோ‌.குணசேகரன், எ‌‌.பச்சையப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மேலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பு தலைமை ஆசிரியர் என்.கெங்கன் தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் பி‌முருகதாஸ் அனைவரையும் வரவேற்றார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் பலரும் பங்கேற்று பள்ளிக்கான பல்வேறு நல உதவி திட்டங்களையும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் வழங்கினர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியர்களை காலில் விழுந்து வணங்கி வாழ்த்துக்களை பெற்றனர். முன்னதாக பள்ளி நூற்றாண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான ஒரு பங்கேற்றனர்.

எளிய முறையில் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும்தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா கதிரவன் வாக்குறுதி திருச்சி...

சேலம்,19/04/2026.அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சேலம்,சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும் இபிஎஸ் வாக்குறுதி.அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் எஸ். வெற்றிவேலுவை ஆதரித்து அவா் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:அதிமுக ஆட்சியில் விவசாயிகள், லாரி தொழில் சிறக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் குடிமராமத்து திட்டத்தை திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டனா். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.இப்பகுதியில் லாரி தொழில் நலிவடைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இத்தொழில் சிறக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இப்போது நியாயவிலைக் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக புகாா் வந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தரமான அரிசி வழங்கப்படும். ஏழைகளுக்காக இந்தத் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தும். அதேபோல விலையில்லா பருப்பும், எண்ணெய்யும் வழங்கப்படும்.தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்கேடு அதிகரித்துவிட்டது. சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பெண்களுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதுகாப்பில்லை. மக்களைக் காக்க வேண்டிய காவலா்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை. காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதிமுக ஆட்சி மலர வேண்டும்.தலைவாசல் பகுதியில் ரூ. 1,200 கோடியில் 1.50 ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடைப்பூங்கா அமைத்தோம். அதை நான் முதல்வராக இருக்கும் போது திறந்துவைத்தேன். ஆனால், தற்போது அது மூடிக்கிடக்கிறது. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், விவசாயிகள் குடும்பம் செழித்திருக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்த பின், அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,என்மீது உள்ள கோபம் காரணமாக சேலம் மாவட்ட மக்களை முதல்வா் ஸ்டாலின் பழிவாங்குகிறாா். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. அப்போது நூறு ஏரி திட்டம் செயல்படுத்தப்படும். விடுபட்ட ஏரிகளையும் கண்டுபிடித்து நீா் நிரப்பப்படும். வட பகுதிகளை செழிப்பான பகுதியாக உருவாக்கிக் காட்டுவேன்.அதிமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும். பெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.சங்ககிரி தொகுதிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம், குடிநீா் , சாலை வசதி போன்ற திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு நீங்கள் கேட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். எனவே அதிமுகவிற்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழக உரிமைப் போரில் வெற்றி: மத்தூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்“மு.க. ஸ்டாலின் வென்றார் – தமிழ்நாடு வென்றது” மற்றும் “வென்றோம் ஒன்றாக” என்ற முழக்கத்தோடு, ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா முறியடிக்கப்பட்டதை முன்னிட்டு மத்தூரில் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.தமிழகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும், தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த ‘தொகுதி மறுவரையறை’ மசோதாவை தமிழக முதலமைச்சர் அவர்கள் கடுமையாக எதிர்த்து நின்றார். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்தூர் பேருந்து நிலையத்தில் கொண்டாட்டம்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் அவர்களின் ஆலோசனையின்படி, மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குணா வசந்தரசு தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெற்றன.நிகழ்வின் போது, திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வானவேடிக்கை நிகழ்த்தி, பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, “வென்றோம் ஒன்றாக” என முழக்கங்களை எழுப்பினர்.செய்தியாளர் முபாரக் 8428723357