June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாவட்டச் செய்திகள்

புதுச்சேரி: தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் அவர்களை, புதுச்சேரி பழனியாண்டவர் குரூப்ஸ்...
வந்தவாசி, மே 15: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று நடைபெற்ற...

*வந்தவாசியில் கலை பண்பாட்டுத் துறையின் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழா..!*வந்தவாசி, மே 15:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் ஜவகர் சிறுவர் மன்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவிழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பெ.பார்த்திபன் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் க.வாசு, டி.ஆர்.நம்பெருமாள், வழக்கறிஞர் சா.இரா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர் கோபிநாத், ஆசிரியை கண்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக படைக்கப்பட்டது. மேலும் சிலம்பம் சுழற்றல், கீபோர்டு வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். நிகழ்வில் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கீபோர்டு கலைஞர் ஜேம்ஸ், சிலம்பம் மாஸ்டர் பெ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வை கேப்டன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார். இதில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியில் ஓவிய ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

திருப்பூர்:மே-15 கருவம்பாளையம்-காங்கிரஸ் திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் பி.கோபால்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் 43வது வார்டு தலைவி .எஸ்.பிரேமலதா B.com...
வந்தவாசி, மே 14: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும்...

கோவிலில் சீட்டு போடும் பணிக்காக வேலை வாங்கி தருவதாக கூறி. 425000 மோசடி செய்த அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வடமதுரை மே14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல் திருச்சி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சிம்ம சொற்பனமாக அமைந்திருக்கும் வண்டி கருப்பண்ண சாமி கோவிலில் சீட்டு போடும் வேலை வாங்கி தருவதாக கூறி அறங்காவலர் ரங்கநாதன் என்பவர் அய்யலூர் மணியக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த உஷாராணி என்ற பெண்ணிடம் ரூபாய் 4,25,000 பணம் வாங்கிக் கொண்டு இன்றும் நாளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கோவில் அருகே நின்று அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோஷங்களில் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் அடிப்படையில் போலீசார் கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட அறங்காவலர் வசம் வட்டிக்காசு போல் உங்களுக்கு வாங்கி கொடுத்து சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர் அறங்காவலர் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா அல்லது இவர் மட்டுமே ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி உங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி புகார் அளித்தும் வடமதுரை போலீசார் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம். திண்டுக்கல் மே 14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் கலர் பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் வயது 30 இவர் தனியார் பால் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் வடமதுரை தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த சோபியா வயது 21 என்ற பெண்ணை கடந்த ஒரு ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார் பெண் கேட்டு தர மறுத்ததாக தெரியவந்தது இருவரும் காதலித்து வந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அய்யலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் பின்னர் பெண் வீட்டார் பிரச்சினை செய்வார்கள் என கருதி வடமதுரை காவல் நிலையத்தில் காதலர்கள் மனக்கோளத்தில் தஞ்சம் அடைந்தனர் வடமதுரை போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ அறிவுரை கூறி யாரும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.