மது பாட்டிலுக்கு அதிகப்படியாக ரூ 10 வசூல் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரி
காவல் நிலையத்தில் மணப்பாறை எம்எல்ஏ ரா கதிரவன் புகார் மனு
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபான கடை எண்கள் 10341,10320,10321,10323,10324,10331,10401,10547,10568 ஆகிய கடைகளில் பாட்டிலுக்கு ரூபாய் 10 அதிகம் வசூல் செய்வதாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவனுக்கு தகவல் கிடைத்ததன் பேரில்
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கதிரவன் இது குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா மற்றும் மணப்பாறை பகுதிகளில் செயல்பட்டு வரும் மேற்கண்ட மதுபான கடைகளில் ரூபாய் 10 அதிகம் வசூல் செய்வதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார்
புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் ( CSR ) 0522/2026 ஆக பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ கதிரவனுக்கு உறுதி அளித்தனர்


More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.