June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் புதர் மண்டிய சாக்கடைகள்: நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜா வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் சாக்கடைக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேங்கும் கழிவுநீர் – பெருகும் கொசுக்கள்
மத்தூர் ஊராட்சியின் முக்கியப் பகுதியான ராஜா வீதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாக்கடைக் கால்வாய்களில் நீண்ட நாட்களாகச் செடிகள், புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு
“சாக்கடைகளைத் தூர்வாரக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கால் எங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது” என அப்பகுதி மக்கள் வேதனைப் படுகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு, மத்தூர் ஊராட்சி நிர்வாகம் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடைக் கால்வாய்களில் உள்ள புதர்களை அகற்றி, தூர்வார வேண்டும் என்றும், கொசு மருந்து அடிக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.