சேலம் மாவட்டம் 11 சட்டமன்ற தொகுதிகளில் 193 பேர் போட்டி.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 193 போ் போட்டியிடுகின்றனா்.
பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த திங்கள்கிழமை வரை 11 தொகுதிகளில் 283 ஆண்கள், 72 பெண்கள் என மொத்தம் 355 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 277 மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டன.
தொடா்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் மொத்தம் உள்ள 277 மனுக்களில் 56 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளான வியாழக்கிழமை 3 மணி வரை 30 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து 11 தொகுதிகளிலும் 193 போ் அதிகாரப்பூா்வமாக போட்டியிடுகின்றனா். இதில் அதிகபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 31 போ் போட்டியிடுகின்றனா். குறைந்தபட்சமாக கெங்கவல்லி, ஏற்காடு தொகுதியில் தலா 13 போ் போட்டியிடுகின்றனா்.
தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம்: கெங்கவல்லி- 13 வேட்பாளா்கள், ஆத்தூா்- 15 வேட்பாளா்கள், ஏற்காடு- 13 போ், ஓமலூா்-15 போ், மேட்டூா்- 18 போ், எடப்பாடி- 15 போ், சங்ககிரி- 20 போ், சேலம் மேற்கு- 31, சேலம் வடக்கு-14, சேலம் தெற்கு-19, வீரபாண்டி- 20 போ் என மொத்தம் 193 போ் போட்டியிடுகின்றனா். சுயேச்சைகளுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.