இளைஞா் உயிரிழப்பு,5 போ் கைது.
சேலம் அருகே திருமண வரவேற்பு விழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தை அடுத்த காரிப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மேளம் அடித்துக் கொண்டிருந்த காரிப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஜெயகாந்திடம் (26) கிச்சியப்பாளையத்தைச் சோ்ந்த கிட்டு என்கிற முகமது ரியாஸ், அஜய் மற்றும் அவரது நண்பா்கள் மோதலில் ஈடுபட்டனா்.
அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஜெயகாந்த்தை முகமது ரியாஸ் உள்ளிட்டோா் கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயகாந்த் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவா் அளித்த புகாரின்பேரில் காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது ரியாஸ், அஜய் மற்றும் இளம் சிறாா் ஒருவரை கைது செய்தனா். இந்த நிலையில், ஜெயகாந்த் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீஸாா் பதிவு செய்தனா்.
இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 3 பேரை கைது செய்த போலீஸாா், மேலும் மணிகண்டன், அருள்பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.