கோவை டிசம்பர்-06
தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஐம்பது வருடங்களாக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்…
இந்நிலையில் இவரது பிறந்தநாள் வரும் டிசம்பர் 12 ந்தேதி வர உள்ள நிலையில்,கோவையை சேர்ந்த நுண் ஓவியர் யு.எம்.டி.ராஜா,ஆயிரம் வாலா பட்டாசில் சூப்பர் ஸ்டார் உருவத்தை ஓவியமாக வடிவமைத்துள்ளார்..
ஒவ்வொரு பட்டாசுகளையும் தனித்தனியாக பிரித்து எடுத்து வரிசைப்படுத்தி அடுக்கி ஓவியமாக வடிவமைத்துள்ள இதில், வெள்ளை பட்டாசு திரிகளை ரஜினிகாந்தின் தலைமுடி வெண்மை போல வடிவமைத்து முழு பட்டாசு ஓவியமாக 24 மணி நேரம் சமயம் எடுத்து தொடர்ச்சியாக வரைந்து கவனம் ஈர்த்துள்ளார்…
உலகம் முழுவதும் ரஜினிகாந்த் அவருடைய பிறந்த நாளை பட்டாசு வெடித்து கொண்டாடும் வேளையில் அவருக்கு பட்டாசிலேயே ஓவியமாக வரைந்து பிறந்தநாள் பரிசாக சிறப்பு செய்துள்ளதாக ஓவியர் ராஜா தெரிவித்துள்ளார்..

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!