கோவை டிசம்பர்-06
தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஐம்பது வருடங்களாக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்…
இந்நிலையில் இவரது பிறந்தநாள் வரும் டிசம்பர் 12 ந்தேதி வர உள்ள நிலையில்,கோவையை சேர்ந்த நுண் ஓவியர் யு.எம்.டி.ராஜா,ஆயிரம் வாலா பட்டாசில் சூப்பர் ஸ்டார் உருவத்தை ஓவியமாக வடிவமைத்துள்ளார்..
ஒவ்வொரு பட்டாசுகளையும் தனித்தனியாக பிரித்து எடுத்து வரிசைப்படுத்தி அடுக்கி ஓவியமாக வடிவமைத்துள்ள இதில், வெள்ளை பட்டாசு திரிகளை ரஜினிகாந்தின் தலைமுடி வெண்மை போல வடிவமைத்து முழு பட்டாசு ஓவியமாக 24 மணி நேரம் சமயம் எடுத்து தொடர்ச்சியாக வரைந்து கவனம் ஈர்த்துள்ளார்…
உலகம் முழுவதும் ரஜினிகாந்த் அவருடைய பிறந்த நாளை பட்டாசு வெடித்து கொண்டாடும் வேளையில் அவருக்கு பட்டாசிலேயே ஓவியமாக வரைந்து பிறந்தநாள் பரிசாக சிறப்பு செய்துள்ளதாக ஓவியர் ராஜா தெரிவித்துள்ளார்..

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்