திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பு ஆதரவு திரட்டினார்.
நாமக்கல். மார்ச் 31
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளின் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2026 சட்டமன்ற பொது தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியின் தீவிரமாக தேர்தல் களத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம், சுயேச்சைகள் என தங்கள் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக எஸ். பாலுவை திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் எஸ். பாலு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தொடர்ந்து அவர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதனை அடுத்து அதற்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.