வந்தவாசி, மார்ச் 03:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வளரும் விஞ்ஞானி விருது பெற்றமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காஞ்சி டிஜிட்டல் டீம் சார்பாக அறிவியல் தினத்தன்று வாலாஜாபாத் அருகில் தனியார் கல்லூரியில் நடத்திய மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் நிகழ்வில் வெற்றி பெற்று வளரும் விஞ்ஞானி விருது பெற்று பங்கேற்பு சான்றிதழ் பெற்ற செய்யாறு பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சான்றிதழ், கேடயம், மெடல் பரிசுப் பொருள்களை பள்ளியில் நடைபெற்ற விழாவில் செய்யாறு ரெட் கிராஸ் சங்க செயலாளர் சண்முகம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், பள்ளி தலைமையாசிரியை இரா.தேன்மொழி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!