வந்தவாசி, மார்ச் 29:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராணி பெருமாள், வந்தவாசி செல்வ விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், மாவட்ட அவைத் தலைவர் டிகேபி மணி, நகர செயலாளர் ஓட்டல் பாஷா, பாஜக நிர்வாகிகள் முத்துசாமி, சுரேஷ், பாமக வரதன், புரட்சி பாரதம் ஜோசப், அமமுக வழக்கறிஞர் வெங்கடேசன் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பலரும் உடன் பங்கேற்றனர்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!