June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புத்தாண்டையொட்டி பழ அலங்காரத்தில் பாண்டுரங்கன்..!

வந்தவாசி, ஏப் 15:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று தமிழ் வருடப் பிறப்பையொட்டி மூல மூர்த்திகளுக்கு ஆயிரக்கணக்கான பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச பூஜைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.