மணப்பாறை மே 22
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் அகிம்சா தொண்டு நிறுவனத்தின் மூலமாக அகிம்சா மவுலி பண்ணை வளாகத்தில் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் வையம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி கடலூர் மாவட்டம் செல்வகுமார் தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது அகிம்சா நிறுவன இயக்குனர் விக்டர் விவசாயிகளையும் பயிற்றுவிக்க வந்தவர்களையும் வரவேற்று அறிமுகப்படுத்தினார் பயிற்றுனர் செல்வகுமார் தேனீ வளர்ப்பு பயிற்சி பற்றியும் அதன் முக்கியத்துவம் பாதுகாப்பு பற்றி தேனீக்களால் மனிதர்களுக்கு மருத்துவத்திலும் விவசாயத்திலும் எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுகிறது என்பதனையும் விவசாயிகளுக்கு விவசாயத்தில் மகரந்த சேர்க்கை மூலம் பூக்கும் திறன் விளைச்சலை அதிகப்படுத்தி வழங்குவதன் மூலம் தேனீக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறினார் தேனீக்களை எவ்வாறு வளர்ப்பது என்றும் பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்ப்பது பற்றியும் தேன் மனிதனுக்கு சளி இருமலுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது போன்ற கருத்துக்களை விவரங்களையும் தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி தேனீ பற்றிய பய உணர்வை நீக்கினார் விழாவில் அகிம்சா நிறுவனத்தின் பொருளாளர் ராணி பயிற்றுநர் செல்வகுமார் அகிம்சா நிறுவன பணியாளர் சூசைமேரி , மகேஷ், சுதா, ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமான விவசாயிகளும் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்