June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி கழகத்தை பிரிப்பது குறித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் BLA-2 முகவர்கள் ஐந்து பேர் கொண்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணியாற்றுவது குறித்தும் ஜனவரி-9, கடலூர் மாநாடு செல்வது குறித்தும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் சார்பாக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் பாரதிதாசன் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் தலைமையில் ஸ்ரீரங்கம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழகத் துணைச் செயலாளரும் டெல்டா மண்டல பொறுப்பாளருமான முன்னால் எம்.எல்.ஏ.செந்தில்குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சதீஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட அவைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பி அர்ஜுன் மாவட்டக் கழக துணை செயலாளர் டி நீலமேகம், பகுதி கழக அவை தலைவர் பாலாஜி, வட்ட கழக செயலாளர்கள் சுரேஷ், ரங்கராஜ்,ரங்கன், பாஸ்கர், ரவிச்சந்திரன், வடமலை மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் கழக மாற்றுத்திறனாளி அணி துணைச் செயலாளர் சி.வாஞ்சி குமரவேல் நன்றியுரை வழங்கினார்.