February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய கராத்தே போட்டியில் திகழ்ந்த ஈரோடு மாணவர்கள் – தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! 💪💐🎉

மத்திய பிரதேசம், குவாலியர் நகரில் நடைபெற்ற C.B.S.E பள்ளிகளுக்கான தேசிய கராத்தே போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின.

இந்த உயரிய போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த Erode Public School மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பான திறமையால் அனைவரையும் கவர்ந்தனர்.

2025 நவம்பர் 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்ற 1st CBSE National Karate Championship போட்டியில், நமது பள்ளி மாணவர்கள் முதல் முறையாக தேசிய போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

✨ S.N. நிதீசன் (Grade 7) — வெள்ளிப்பதக்கம் 🥈

✨ R. கபிலன் (Grade 7) — வெண்கலப் பதக்கம் 🥉

அவர்களின் இந்த அபார சாதனை, தமிழகத்திற்கும் Erode Public School பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளது என்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 🔥🌟

இந்த வெற்றிக்குப் பின், சாதனை படைத்த இரு வீரர்களும் ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்தபோது,அவர்களின் கராத்தே பயிற்சியாளர் R. Suresh (ஆசிய நடுவர்) மற்றும் பெற்றோர்களையும், சக மாணவர்கள் உள்ளிட்ட அனைவராலும் உற்சாகமான சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 🎉💐

மேலும், இந்த சிறப்பு வரவேற்பு நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 🙏💐

Facebook
YouTube
Instagram
WhatsApp