கபடி விளையாட்டு போட்டிக்கு உதவிகள் செய்து வரும் ஈரோடு தயா அறக்கட்டளைக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்..
ஈரோடு. ஜூலை. 28
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகள், விளையாட்டுப் போட்டிக்கு உதவியாக இருந்த ஈரோடு தயா அறக்கட்டளைக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
ஈரோட்டில் செயல்பட்டு வரும் தயா அறக்கட்டளையின் மூலம் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில் படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.
இதில் குறிப்பாக மலை கிராம பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பான ஒரு இடத்தை பிடிக்க ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்குட்பட்ட மண்டல அளவிலான யு. 17 விரைவில் மாணவிகளுக்கான கபடி போட்டியில் கடம்பூர் பகுதி மாணவிகள் முதல் இடம் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்களின் கபடி விளையாட்டு போட்டிக்கு பல்வேறு வகையில் உதவி செய்து உறுதுணையாக இருந்த ஈரோடு தயா அறக்கட்டளைக்கும், அதன் நிறுவன தலைவர் டாக்டர் என் எம் பிரதீப்புக்கும் தங்களின் மகிழ்ச்சிகளையும், நன்றிகளையும் தங்களின் அணியின் சார்பில் தெரிவித்துள்ளனர்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
செட்டிக்காட்டில் கராத்தே தகுதிப்பட்டை வழங்கும் விழா – அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்பு