வந்தவாசி , ஏப் 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குளோபல் அபாகஸ் அகாடமி மாணவர்கள் பங்கேற்று யோகாசன விழிப்புணர்வில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஆசனங்களை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், நகராட்சி தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி, நல்நூலகர் ஜா.தமீம், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் ஜி.விநாயக மூர்த்தி, ஆசிரியர் மகாவீர் ஆகியோர் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர். நிகழ்வில் யோகா விழிப்புணர்வு செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் அகாடமி ஆசிரியை ம.உஷா நன்றி கூறினார்.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!