தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ் அரசை குறை கூறிக்கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வது தவறு. சுகாதாரத்துறையை பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்பது முறையல்ல என்று அவர் கூறியுள்ளார்.
சபாநாயகர் மற்றும் ஊடகங்களில் வந்த செய்தியின்படி, குறிப்பிட்ட அந்த மருந்து கம்பெனி காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கப்பட்டது. மேலும், இதை வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி ஆகியோரின் உறவினர்கள் நடத்துகிறார்கள் என்று வெட்ட வெளிச்சமாக தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கட்சிகள் செய்த தவறுகளுக்காக, அல்லது அவர்கள் மற்றவர்களுக்கு இடங்களை வாடகைக்கு விட்டதன் மூலமாக நடந்த தவறுகளுக்காக, முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தாங்கள் செய்த தவறுகளை மற்றவர்கள் மீது பழி போடக் கூடாது. மக்களை ஏமாற்றலாம், ஆனால் இயக்கத் தலைவர்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ள அவர், தேசியக் கட்சிகள் இரண்டு பேரும் சண்டையிட்டுக்கொண்டு மாநிலக் கட்சித் தலைவரான முதலமைச்சர் ரங்கசாமியை குறை கூறக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.