June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

*தஞ்சையில் துணிச்சலுடன் செயல்பட்ட எஸ்.எஸ். ஐ-க்கு., போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு..!!*தஞ்சாவூரில்: கடந்த 26.04.2026 தேதியிட்டான்று தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்ரோ பஜார் அருகில், கையில் வாளுடன் ஒருவரை தாக்க முயன்ற குற்றவாளியை, தனது பணி ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்மந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அவரது கடமைப்பற்று, தன்னலமற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் இ. கா. ப., அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்ததுடன்.. சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.