*தஞ்சையில் துணிச்சலுடன் செயல்பட்ட எஸ்.எஸ். ஐ-க்கு., போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு..!!*தஞ்சாவூரில்: கடந்த 26.04.2026 தேதியிட்டான்று தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்ரோ பஜார் அருகில், கையில் வாளுடன் ஒருவரை தாக்க முயன்ற குற்றவாளியை, தனது பணி ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்திய தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்மந்தம் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அவரது கடமைப்பற்று, தன்னலமற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் இ. கா. ப., அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்ததுடன்.. சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.