சங்கராபுரம் டிச 08
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிழக்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்கள் பயிற்சி பட்டறை மற்றும் கிளை நிர்வாகிகள் கூட்டம் மூரார்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்துரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணித் திட்டங்கள், வீடு–வீடாக சென்று வாக்காளர் தொடர்பு வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு, மற்றும் ஒவ்வொரு பூத் மட்டத்திலும் கட்டமைப்பு வலுப்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ராமு சிறப்புரையாற்றி, கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். மாவட்ட இணைச் செயலாளர் கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஜவகர் ஆகியோரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.
மேலும் வழக்கறிஞர் பிரிவு குணதீபன், சங்கராபுரம் நகரச் செயலாளர் கோவிந்தராஜ், நகர இணைச் செயலாளர் குமரேசன், ஒன்றிய இணைச் செயலாளர் பிரபு, பொருளாளர் டென்னிஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஒன்றிய மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.