அரியலூர் பெரம்பலூர் புறவழிச் சாலையில் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது விழாவில் மாவட்ட செயலாளரும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சிவசங்கர் மற்றும் திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்

விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது ஒவ்வொரு இடத்திலும் திமுகவிற்கு என்று அலுவலகம் இருக்க வேண்டும் என கலைஞர் சொல்வதை தான் தற்பொழுது நிறைவேற்றி வருகிறோம் தமிழகத்திலேயே ஒன்றிய செயலாளர்களுக்கு மக்களை சந்திப்பதற்காக ஜீப் வழங்கியவர் அமைச்சர் சிவசங்கர் தான். மேலும் சட்டமன்றத்தில் எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எந்த உறுப்பினர் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய ஒரே ஆள் சிவசங்கர் தான். தலைவரின் கண்ணசைவை வைத்து அதன் படி நடந்து கொள்ளக் கூடியவர். தலைவருக்கு அருகில் பல்வேறு மூத்த அமைச்சர்கள் இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும்போது அது குறித்து பேச அவரைத்தான் தலைவர் பேச சொல்வார். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பான ஆட்சியை நமது தலைவர் தந்துள்ளார். அரியலூர் பெரம்பலூர் திருச்சி மாவட்டங்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தந்துள்ளார் இந்த ஆட்சியைத்தான் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறவர் எல்லாம் குறை சொல்லுகிறார்கள். மீடியாக்காரர்கள் தான் அவர் நடந்தார் போனார் சென்றார் வந்தார் என்கிறார்கள் நமது தலைவரை விட நல்ல ஆட்சியை தருவார் என தமிழக மக்கள் நம்புவார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள் ஒரு காலம் நம்ப மாட்டார்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என கூறினார் மேலும் அரியலூர் கலைஞர் அறிவாலயத்திற்கு கலைஞரின் சிலையை நானே செய்து தந்து விடுகிறேன் எனவும் கூறினார்
விழாவில் திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.