கண்ணை மூடி தூங்கிய சித்ரா… நள்ளிரவில் கணவன் சரவணனுக்கு தோன்றிய கொடூர எண்ணம். அரண்டுபோன ஆத்தூர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் மனைவி சித்ராவை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் சரவணன் காவல் நிலையத்தில் சரண்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவருடைய மகன் சரவணன் (40). ஏரிவாயு அடுப்பு பழுதுபார்க்கும் தொழிலை செய்து வரும் கூலித் தொழிலாளியான சரவணன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவரை காதலித்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு முல்லைவாடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சித்திரா வெளியூரில் உள்ள தனது உறவினர் ஒருவருடன் அடிக்கடி செல்பேசியில் பேசி வருவதை பார்த்த சரவணன் சந்தேகம் அடைந்து தனது மனைவி சித்ராவிடம் இது குறித்து கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இது சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் வாயை துணியால் அடைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு ஆத்தூர் காவல் நிலையத்திற்கு சரவணன் நேரடியாக சென்று போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
அதை தொடர்ந்து போலீசில் சரணடைந்த சரவணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலைக்கு இதுதான் காரணமா இல்லை வேறு ஏதாவது காரணமா என விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன சித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மனைவியின் நடத்தியில் சந்தேகப்பட்டு கூலி தொழிலாளி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் மனைவி சித்ராவை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் சரவணன் காவல் நிலையத்தில் சரண்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.