புதுச்சேரி, ஜூன் 2:
புதுச்சேரியில் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை ஜூன் 8-ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை இளைஞரணி தலைவர் எஸ். பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நிலவி வரும் வெயிலின் கொடுமையை அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும்.
குறிப்பாக சிறு குழந்தைகள் கடும் வெயிலால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள தேதியை மறுபரிசீலனை செய்து, பள்ளிகள் திறப்பை ஜூன் 8-ஆம் தேதி வரை ஒத்திவைத்து மாணவர்களின் நலனை பாதுகாக்க அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!