புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் புதுச்சேரி கலை இலக்கியப் பாசறை செயலாளரும், பிரபல நடிகருமான பாண்டி செல்வம், வரவிருக்கும் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடப் போவதில்லை என்ற தனது அதிரடி முடிவை அறிவித்துள்ளார். இது அரசியல் மற்றும் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் தேர்தலில் போட்டியிடாததற்கு தனது திரை உலக ஆசான் வழங்கிய ஆலோசனையே முக்கியக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசானின் வழிகாட்டுதலின்படி, தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், நாம் தமிழர் கட்சியிலிருந்து தான் விலகவில்லை என்பதையும், கட்சியின் ஒரு அங்கமாகவே தொடர்ந்து செயல்படுவேன் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சித் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களுக்குத் தனது முழு ஆதரவை வழங்கி, தேர்தல் களத்தில் அவர்களுக்காக வலு சேர்ப்பேன் என்று கூறியுள்ளார்.
ஒருவேளை கட்சித் தலைவர் சீமான் தன்னை வேட்பாளராகப் போட்டியிடுமாறு நிர்பந்தித்தால், தலைமைக்குக் கட்டுப்பட்டு அந்த கட்டளையை ஏற்றுப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்