திருச்சி மாவட்டம் , மருங்காபுரி வட்டம் , கலிங்கப்பட்டி , காலனி தெருவை சேர்ந்த பழனி மகன் ஆண்டியப்பன் ( 70 ), இவர் கூலி வேலை செய்து வருவதாகவும் , பொன்னமராவதி – பாலக்குறிச்சி செல்லும் மாநில தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிழக்குக்காடு என்னும் பிரிவு சாலை அருகே சாலையின் ஓரமாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கலிங்கப்பட்டி , கிழக்குக்காடு கிராமத்தைச் சேர்ந்த அழகன் என்பவரது மகன் பிரேம்குமார் என்பவர் தனது (Tata indra) நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆண்டியப்பன் என்பவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்