திருச்சி. ஜன 11-
திருச்சி ரெட்டைவாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் பள்ளியின் 16வது ஆண்டு விழா (ஆரம்பப் பள்ளி) நடைபெற்றது. நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் டாக்டர். R. சக்தி கிருஷ்ணன் (உறுப்பினர் துணைவேந்தர் பாரதிதாசன் இன்சார்ஜ் கமிட்டி) மற்றும் சுவாமி. நிக்கிலேஷ்மிருதா சைதன்யா (அமிர்த விஷ்வ வித்யா பீடம், கோயம்புத்தூர்) மற்றும் பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் இசை, நாடகம் மாணவர்களால் தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல் பள்ளியில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஆசிரிய பெருமக்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!