வந்தவாசி, மார்ச் 13;
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் திருவத்திபுரம் நகராட்சியின் நகரங்களில் தூய்மைகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மகளிர் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்களின் சிறப்பு குறித்து மாணவிகள் பாடல் பாடினர். இவ்வியக்கம் சார்பாக தலைமை ஆசிரியர் இரா.தேன்மொழி, ஆசிரிய பெருமக்களையும் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. பள்ளி சார்பாக தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி இனிப்பும், எழுதுகோலும் வழங்கப்பட்டது .

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்