June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய காட்டு யானை: கும்மளாபுரம் விவசாய நிலங்கள் சேதம் – பொதுமக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்துக்கு உட்பட்ட தேவரபெட்டா காப்புக்காட்டில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கும்மளாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தேவரபெட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை காட்டு யானை, பகல் நேரங்களில்
கும்மளாபுரம் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குள் நுழைந்து ராகி, சோளம், தக்காளி, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்து வருகிறது.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307