வந்தவாசி, டிச 12:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நுழைவு வாயிலில் இபைலிங் முறையை கண்டித்து பெருந்திரள் மற்றும் பெருமுழக்கப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வி.ஜி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் நவாப் ஜான் விஸ்வநாதன் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இபைலிங் நடைமுறையில் உள்ள பொதுமக்களுக்கான பாதிப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் சா.இரா.மணி, சுரேஷ், ராமன், வைணவ வினோதினி மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் உரையாற்றினர். இந்த கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!