மாவட்டச் செய்திகள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு. 1 min read Facebook WhatsApp Post navigation Previous காங்கிரஸ்பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட திமுக நிர்வாகி!!Next *வந்தவாசியில் கலை பண்பாட்டுத் துறையின் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழா..!*வந்தவாசி, மே 15:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் ஜவகர் சிறுவர் மன்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவிழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் பெ.பார்த்திபன் வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் க.வாசு, டி.ஆர்.நம்பெருமாள், வழக்கறிஞர் சா.இரா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர் கோபிநாத், ஆசிரியை கண்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக படைக்கப்பட்டது. மேலும் சிலம்பம் சுழற்றல், கீபோர்டு வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். நிகழ்வில் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கீபோர்டு கலைஞர் ஜேம்ஸ், சிலம்பம் மாஸ்டர் பெ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வை கேப்டன் பிரபாகரன் தொகுத்து வழங்கினார். இதில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியில் ஓவிய ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். More Stories 1 min read மாவட்டச் செய்திகள் கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..! 1 min read மாவட்டச் செய்திகள் அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு. 1 min read மாவட்டச் செய்திகள் மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்