விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேல்மலையனூர் ஒன்றியம்வேலந்தாங்கல்,தாயனூர் வழியாக ஆத்திப்பட்டுசெல்லும் சாலையை
3 கோடியே 12 லட்த்தி 25 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில்ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித் தடமாக மாற்றி அகலப்படுத்தி சாலையை வலுப்படுத்துதல் பணிக்கு பூமி பூஜை விழா தாயனூர் ஊராட்சியில் நடைபெற்றது.
மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராஜேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நெடுஞ்சாலை துறை செஞ்சி உட்கோட்ட பொறியாளர் அக்பர் அலி, உதவி பொறியாளர்கள் விஷ்ணு பிரியா, பாலாஜி,மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி
தக்ஷிணாமூர்த்தி,ராஜா நிர்வாகிகள் எஸ்.பி. சம்பத், அரிதாஸ்,தோப்பு சம்பத்,செல்வம், சிவா, ரஜினி,காமராஜ்,ராஜ்குமார்,இளைஞர் அணி தாஸ், ஹரிஷ்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்