வந்தவாசி, நவ 07:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எஸ்.மோட்டூர், நாவல்பாக்கம், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி இன மக்கள் கடந்த 12ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு மனை பட்டா இடம் கேட்டு போராடி வருகின்றனர். அதற்கான செயல்பாடு இன்னும் முடிவடையாத சூழலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.சம்பத்குமார் அவர்களிடம் முறையாக மனு அளித்தனர். கோட்டை மூலை பகுதியில் இருந்து மனுக்களை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்து வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் அப்துல் காதர், நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட குழுவினர் சுகுணா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!