சங்கராபுரம் நவ 04
அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் கள்ளக்குறிச்சி தனியார் கல்லூரியில் பயிலும் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்ந்த மாணவர் சக்தி 60 – 65 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு எதிர் எதிர்த்து விளையாடிய மூன்று போட்டியாளர்களையும் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதன் மூலம் ஹரியானாவில் நடக்கவிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். மிகக் குறுகிய காலத்தில் கடின பயிற்சி மூலம் இந்த சாதனையை இவர் அடைந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கி வரும் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பயிற்சியாளர் சூரியமூர்த்தி தான் இவரின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
பாஜக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு
இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று, விளையாட்டில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.