கள்ளக்குறிச்சி நவ 13
22 வது ஜூனியர் ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி – 2025 & 5 வது ஆல் இந்தியா ஜம்ப்ரோப் சாம்பியன்ஷிப் போட்டி – 2025 மத்தியபிரதேச மாநிலம் ரேவாவில் நடைபெற்றது.
இதில் டெல்லி, ஹரியானா,சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் கள்ளக்குறிச்சி கயிறு தாண்டுதல் சங்க மாணவ, மாணவிகள் 18 பேர் உட்பட தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்க மாணவ மாணவிகள் 23 பேர் கலந்து கொண்டனர்.
U-11,U-14,U-18 என வெவ்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி மொத்தம் 21 தங்கப்பதக்கமும், 13 வெள்ளிப் பதக்கமும்,12 வெண்கல பதக்கமும் ஆக மொத்தம் 46 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்து தமிழ்நாட்டிற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை தமிழ்நாடு கயிறு தாண்டுதல் சங்க செயலாளர் சுகுமாறன் வெகுவாக பாராட்டினார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கயிறு தாண்டுதல் சங்க தலைவர் குசேலன் மற்றும் பெற்றோர்களும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். உடன் பயிற்சியாளர் சூரியமூர்த்தி இருந்தார்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..