June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஏழைகளுக்கு உணவு வழங்கினார்… ஈரோடு. மே. 29 உலக பட்டினி...
பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி ஆண்டவனை வழிபட்ட இஸ்லாமிய பெருமக்கள்… ஈரோடு. மே. 29 ஈரோடு மாவட்டத்தில் ஈகைத் திருநாளாம்...

மருத்துவ படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற வேடசந்தூர் அஸ்வின் மணிகண்டனுக்கு தேசிய விருது:—திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியத்தை சேர்ந்த டாக்டர் சி.அஸ்வின் மணிகண்டன் நுரையீரல் சிறப்பு மருத்துவர் படிப்பில் இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றமைக்கு தேசிய விருதினை டெல்லியில் நடைபெற்ற விழாவில் பெற்றார்.இவருடைய தந்தை சின்னழகர் என்பவர்திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சிதையன்கோட்டை நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.1990 ல் கன்னிவாடி பகுதியில் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார்.அப்போது அவர் சம்பளம் 120 மட்டுமே.அந்த 120 சம்பளம் வாங்குவதற்கு 60 கிமீ பயணம் செய்தார்.எனினும் பொது மக்களை முன்னேற்றுவதற்காக தொடர்ந்து வேடசந்தூர் பகுதியில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமுகப் பணியாற்ற தொடங்கினார்.தன்னிகரில்லா சேவையை பொதுமக்களுக்காக ஆற்றியமைக்காக ஏராளமானோரின் அன்பை பெற்றார்.1991ல் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு வேடசந்தூர் பகுதியில் அரசு உதவியுடன் பொது மக்களுக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு,இன்று வரை சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நுரையீரல் சிறப்பு மருத்துவ படிப்பில் தேசிய விருது பெற்ற சி.அஸ்வின் மணிகண்டன் 1992-ம் ஆண்டு பிறந்தார்.ஆரம்பக் கல்வியை வேடசந்தூர் மாலா தொடக்கப்பள்ளியில் பயின்றார். சிறுவயதிலையே படிப்பில் ஆர்வம் கொண்ட இவர் 6 முதல்10 வகுப்பு வரை திண்டுக்கல் அக்க்ஷயா பள்ளியிலும்,10 ஆம் வகுப்பில் மதிப்பெண் 470 பெற்று, 11முதல் 12வகுப்பு வரை திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளியில் படித்தார்.பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை தொடர்ந்தார். எந்தவித அரியர்ஸ் இல்லாமல் மருத்துவ படிப்பை முடித்தார். அடுத்தபடியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மேற்கு வங்காளத்தில் நுரையீரல் சிறப்பு மருத்துவர் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு படிப்பை தொடர்ந்தார்.தனது கடின உழைப்பால் இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்று தமிழ்நாட்டிற்கும்,வேடசந்தூர் மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தலைமையில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்றுள்ளார்.நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஐ.பி.நட்டா, திருமதி அனுப்பிரியா, டாக்டர் அபிஷாட் செத் தலைவர் தேசிய தேர்வு கட்டுப்பட்டு அலுவலகம் மற்றும் மருத்துவ அறிவியல் டாக்டர் மினு பாஜ்பாய் துணை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேசிய விருது பெற்ற அஸ்வின் மணிகண்டன் கூறும்போது:மருத்துவ படிப்பில் தேசிய விருது பெற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்த விருதினை பெறுவதற்கு ஊக்கம் அளித்த எனது குடும்பத்தினருக்கும், வேடசந்தூர் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர்காலத்தில் மருத்துவத்தில் ஆராய்சியாளராக வேண்டும். ஏழை, எளிய பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்யவேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் தெரிவித்தனர்… ஈரோடு. மே. 29 தமிழக கைத்தறித்துறை அமைச்சர் விஜய்...
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் திரளாகப் பங்கேற்ற சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.தியாகத் திருநாளான...
கிருஷ்ணகிரி: பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து ஆசிரியா்களுக்கும் பாட வாரியாக இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என...
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில்...