July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைமை அலுவலகத்தில், இந்திய பிரதமர் Narendra Modi அவர்களின் “நாரி சக்தி வந்தனா” முன்னெடுப்பின் அடிப்படையில், பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 33% ஒதுக்கீடு வழங்கும் சட்ட முயற்சிக்கு ஆதரவாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவி திருமதி.தாமரைச்செல்வி அவர்கள் கலந்து கொண்டு, பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு அரசியல் துறையில் சம உரிமை மற்றும் முன்னேற்றம் கிடைக்க இந்தச் சட்டம் முக்கியமானதாக இருக்கும் என்றும், இதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்ல மகளிர் அணி முனைப்புடன் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், பிரதமர் Narendra Modi அவர்கள் பதவியேற்ற பின்னர் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை...
சேலம்,தருமபுரி மாவட்டங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல்.15-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா். மாவட்ட...
புதுச்சேரியில் பரபரப்பு சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியை கழுத்து அறுத்துக் கொன்ற மெக்கானிக் குற்றவாளியை தன்வந்திரி காவல் துறையினர் தேடி...

ஓம்சக்தி சேகர் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அன்பிற்கினிய புதுவை மக்களுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் இனிய...
சேலத்தில் தேர்தல் பரப்புரை மேடையில் மயங்கி விழுந்த ராமதாஸ் – அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் சும்மா விடமாட்டேன்...
தொழிற்சாலை வணிகம் நிறைந்த தொகுதி யாக மாற்றுவேன் தேர்தல் பரப்புரையில் தவெக வேட்பாளர் ரா.கதிரவன் வாக்குறுதி திருச்சி மாவட்டம்...

போடியில் தேர்தல் பணிமனையை திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம், எம்பி தங்கதமிழ்ச்செல்வன் திறந்து வைத்தனர்: -தேனி. ஏப்.13- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், காமராஜர் பஜார் சாலையில் ( பொன்னு சினிமாஸ் அமைந்திருந்த இடத்தில்), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, போடிநாயக்கனூர் நகரத்தில் புதிய தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னாள் முதலமைச்சரும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்,தேனி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.முன்னாள் எம்பி ரவீந்திரநாத், திமுக போடிநாயக்கனூர் நகர் செயலாளர் புருசோத்தமன்,போடிநாயக்கனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன் மற்றும் தி.மு.க. மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் போடி சீனிவாச பெருமாள் கோவிலில் போடி தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.போடி கிழக்கு மகாஜன மறவர் சங்க நிர்வாகிகளை சந்தித்தார்.தொடர்ந்து சிசம் ஸ்கூல் அருகில் உள்ள சர்ச் பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.போடி தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.